இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

31 March 2012

பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் !

'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை மறைக்கும் வகையில் களப் பரிசோதனை விவரங்களை வெளியிட அரசு நிறுவனம் மறுத்துள்ளது. 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை வெளியிட மறுப்பது அவற்றின் நம்பகத்தன்மையை பெருமளவு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

 


கத்​த​ரி​க்காய் "தானே" என்று கண்​டு​கொள்​ளா​மல் இருந்​தால்,​​ நாளை
அனைத்து தாவ​ரங்​க​ளுக்​கும் மர​பணு மாற்​றப்​ப​டும் ஆபத்து ஏற்​ப​டும்.​





எனவே,​​ பி.டி.​ கத்​தரி நாட்​டில் நுழை​வதை மக்​களை கடு​மை​யாக எதிர்த்​
துப் போராட வேண்​டும் என்​றார் இயற்கை வேளாண் விஞ்​ஞானி 
கோ.​ நம்​மாழ்​வார்.

த.மு​.எச,​​ தமிழ்​நாடு அறி​வி​யல் இயக்​கம் சார்​பில் தஞ்​சா​வூ​ரில்
சனிக்​கி​ழமை (03/04/10) இரவு நடை​பெற்ற மக்​கள் சந்​திப்​புக் கூட்​டத்​
தில்,​​ பேரா​சி​ரி​யர் வெ.​ சுகு​மார் எழு​திய மர​பணு தொழில்​நுட்​ப​
மும் பி.டி.​ கத்​த​ரி​யும் என்ற நூலை வெளி​யிட்டு அவர் மேலும் பேசி​யது:​
-

வெள்​ளம் ஏற்​ப​டும் ​போ​தெல்​லாம் திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் சுமார் 2
இலட்​சம் ஏக்​கர் பயிர்​கள் மூழ்கி அழி​வது வாடிக்​கை​யாக உள்​ளது.​ நான்
சிறு​வ​னாக இருந்​த​போது,​​ இப் பகு​தி​யில் மடுவு முழுங்கி,​​ தங்​கச்
சம்பா போன்ற நெல் இரகங்​கள் இருந்​தன.​ அந்த இரகங்​கள் ஒரு ஆளை​விட அதிக
உய​ரம் வள​ரும்.​ தண்​ணீர் மட்​டம் உயர உயர அது​வும் வள​ரும்,​​ கதி​ரும்
பாதிக்​காது.

இதன் ​மூ​லம் வைக்​கோல் அதி​க​மா​கக் கிடைத்து,​​ அவற்​றைத் தின்ற மாடு​க​
ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​மாக இருந்​தன.​ பாலும்,​​ இயற்கை உர​மும்
அதி​க​ள​வில் கிடைத்து,​​ மக்​கள் வள​மாக இருந்​த​னர்.

ஆனால்,​​ தற்​போது பயிர்​க​ளின் வளர்ச்சி முக்​கால் முழம் அள​வி​லேயே உள்​
ளது.​ மாடு​க​ளுக்​கும் தீனி கிடைக்​க​வில்லை.​ இரத்​தச் சோகை​யால் உல​
கில் அதி​கம் பாதிக்​கப்​பட்​டோர் நமது கிரா​மங்​க​ளில்​தான் உள்​ள​னர்.

இந்​தி​யா​வில் மட்​டும் 30,000க்கும் மேற்​பட்ட நெல் இரகங்​கள் இருந்​
தன.​ விவ​சா​யி​கள் ஒரு​வ​ருக்கு ஒரு​வர் இவற்​றைப் பரி​மா​றிக் கொண்​ட​
னர்.​ பசுமை புரட்​சிக்​குப் பின்​னர் ஐ.ஆர்.​ 20,​ ஐ.ஆர்.​ 50 போன்ற 4
நெல் இரகங்​கள்​ தான் இருந்​தன.​ பின்​னர் அவை​யும் காணா​மல் போய்​விட்​
டன.

அன்று விவ​சா​யத்​துக்கு வெளியி​லி​ருந்து எந்த முத​லீ​டும் வர​வில்லை.​
இன்றோ,​​ ​ எல்​லா​வற்​றை​யும் வெளியி​லி​ருந்தே வாங்​கு​கின்​ற​னர்.​
நிலைத்தை விற்​றுக் கடனை அடைக்​கின்​ற​னர்.​ நிலை கைமீ​றும்​போது தற்​கொ​
லை​யும் செய்து கொள்​கின்​ற​னர்.

இந்​தி​யா​வில் கடந்த சில ஆண்​டு​க​ளில் மட்​டும் 2 இலட்​சத்​துக்​கும்
அதி​க​மான விவ​சா​யி​கள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ள​னர்.​ ஆசைப்​பட்டு
இந்த முடிவை அவர்​கள் ​ எடுப்​ப​தில்லை.​ வாழ முடி​யாது என்ற நிலை​
யில்,​​ அவர்​கள் எடுக்ó​கும் முடி​வால்,​​ அவர்​க​ளின் குடும்​பங்​களே
சிதை​கின்​றன.

விவ​சா​யி​க​ளுக்கு நன்மை செய்​வ​தற்​காக பசு​மைப் புரட்சி கொண்டு வரப்​ப​
ட​வில்லை.​ 2ஆம் உல​கப் போர் நின்ற பின்​னர்,​​ அது​வரை போரில் பயன்​ப​
டுத்​தப்​பட்டு வந்த இரசா​ய​னங்​களை,​​ பூச்​சிக்​கொல்லி என்ற பெய​ரில்
இந்​திய வயல்​க​ளில் ​ கொட்​டு​வ​தற்​கா​கவே பசு​மைப் புரட்சி கொண்​டு​வ​
ரப்​பட்​டது.​ இதன் மூலம் அமெ​ரிக்​கா​வின் ஹென்றி போர்டு,​​ இராக்​பெல்​
ல​ரின் இரசா​யன நிறு​வ​னங்​கள் கொள்ளை இலாபம் அடைந்​தன.

அதே​போ​லத்​தான்,​​ தற்​போது மர​பணு மாற்று கத்​த​ரியை நம் நாட்​டில்
நுழைக்​கப் பார்க்​கின்​ற​னர்.​ அதற்கு கோவை வேளாண் பல்​க​லைக்​க​ழ​கம்
போன்​றவை துணை போகின்​றன.

தமி​ழ​கத்​தில் ஒவ்​வொரு ஊருக்​கும் ஒரு கத்​தரி வகை உள்​ளது.​ சுவை​யும்
ஊருக்கு ஏற்ப மாறும்.​ இந்​தி​யா​வில் 3,000 வகை கத்​த​ரி​கள் உள்​ளன.​
பி.டி.​ கத்​த​ரியை அனு​ம​தித்​தால் நாட்​டில் ஒரு கத்​தரி வகை மட்​டும்​
தான் இருக்​கும்.​ நாடு முழு​வ​தும் எதை உற்​பத்தி செய்ய வேண்​டும்;​ எதை
உண்ண வேண்​டும் என்​பதை ஒரு கம்​பெனி முடிவு செய்​யும் நிலை உரு​வா​கி​வி​
டும்.

புழு​வுக்கு எதி​ரி​யாக இருக்​கும் பிடி கத்​தரி மனி​தர்​க​ளுக்​கும் எதி​
ரி​தான்.​ இதை உண்​டால் புற்று நோய்,​​ ஆண்,​​ பெண் மலட்​டுத் தன்மை போன்​
றவை ஏற்​ப​டு​வ​தோடு,​​ தாவ​ரங்​க​ளின் செல் கட்​ட​மைப்பே குலைந்து
விடும்.

அறி​வி​யல் கண்​டு​பிப்​பு​கள் எல்​லாம் நன்மை செய்​யும் என்று ஏமாற வேண்​
டாம்;​ தீமை​யும் செய்​யும்.​ பி.டி.​ கத்​தி​ரி​யால் விவ​சா​யி​க​ளின்
வறுமை போக்​கப்​ப​டும் எனக் கூறு​கின்​ற​னர்.​ தொழில்​நுட்​பம் மட்​டும்
பட்​டி​னி​யைப் போக்​காது,​​ அர​சின் மக்​கள் நலன் சார்ந்த கொள்​கை​
யும்,​​ சீரான உற்​பத்தி,​​ விநி​யோ​க​மும்​தான் இதைச் சாத்​தி​யப்​ப​
டுத்​தும் என்​றார் நம்​மாழ்​வார்.

​கூட்​டத்​துக்கு தமீம் அன்​சாரி தலைமை வகித்​தார்.​ ம.​ சந்​தி​ர​
மெளலி,​​ வழக்​கு​ரை​ஞர் வெ.​ ஜீவக்​கு​மார் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​
நூலை நம்​மாழ்​வார் வெளி​யிட,​​ டெல்டா ரோட்​டரி சங்​கத் தலை​வர் ஏ.​
சீனி​வா​சன் பெற்​றுக்​கொண்​டார்.​ பெ.​ விஜ​ய​கு​மார் நன்றி கூறி​னார்.

No comments:

Post a Comment