இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

31 March 2012

பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் !

'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை மறைக்கும் வகையில் களப் பரிசோதனை விவரங்களை வெளியிட அரசு நிறுவனம் மறுத்துள்ளது. 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை வெளியிட மறுப்பது அவற்றின் நம்பகத்தன்மையை பெருமளவு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

 


கத்​த​ரி​க்காய் "தானே" என்று கண்​டு​கொள்​ளா​மல் இருந்​தால்,​​ நாளை
அனைத்து தாவ​ரங்​க​ளுக்​கும் மர​பணு மாற்​றப்​ப​டும் ஆபத்து ஏற்​ப​டும்.​





எனவே,​​ பி.டி.​ கத்​தரி நாட்​டில் நுழை​வதை மக்​களை கடு​மை​யாக எதிர்த்​
துப் போராட வேண்​டும் என்​றார் இயற்கை வேளாண் விஞ்​ஞானி 
கோ.​ நம்​மாழ்​வார்.

த.மு​.எச,​​ தமிழ்​நாடு அறி​வி​யல் இயக்​கம் சார்​பில் தஞ்​சா​வூ​ரில்
சனிக்​கி​ழமை (03/04/10) இரவு நடை​பெற்ற மக்​கள் சந்​திப்​புக் கூட்​டத்​
தில்,​​ பேரா​சி​ரி​யர் வெ.​ சுகு​மார் எழு​திய மர​பணு தொழில்​நுட்​ப​
மும் பி.டி.​ கத்​த​ரி​யும் என்ற நூலை வெளி​யிட்டு அவர் மேலும் பேசி​யது:​
-

வெள்​ளம் ஏற்​ப​டும் ​போ​தெல்​லாம் திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் சுமார் 2
இலட்​சம் ஏக்​கர் பயிர்​கள் மூழ்கி அழி​வது வாடிக்​கை​யாக உள்​ளது.​ நான்
சிறு​வ​னாக இருந்​த​போது,​​ இப் பகு​தி​யில் மடுவு முழுங்கி,​​ தங்​கச்
சம்பா போன்ற நெல் இரகங்​கள் இருந்​தன.​ அந்த இரகங்​கள் ஒரு ஆளை​விட அதிக
உய​ரம் வள​ரும்.​ தண்​ணீர் மட்​டம் உயர உயர அது​வும் வள​ரும்,​​ கதி​ரும்
பாதிக்​காது.

இதன் ​மூ​லம் வைக்​கோல் அதி​க​மா​கக் கிடைத்து,​​ அவற்​றைத் தின்ற மாடு​க​
ளின் எண்​ணிக்​கை​யும் அதி​க​மாக இருந்​தன.​ பாலும்,​​ இயற்கை உர​மும்
அதி​க​ள​வில் கிடைத்து,​​ மக்​கள் வள​மாக இருந்​த​னர்.

ஆனால்,​​ தற்​போது பயிர்​க​ளின் வளர்ச்சி முக்​கால் முழம் அள​வி​லேயே உள்​
ளது.​ மாடு​க​ளுக்​கும் தீனி கிடைக்​க​வில்லை.​ இரத்​தச் சோகை​யால் உல​
கில் அதி​கம் பாதிக்​கப்​பட்​டோர் நமது கிரா​மங்​க​ளில்​தான் உள்​ள​னர்.

இந்​தி​யா​வில் மட்​டும் 30,000க்கும் மேற்​பட்ட நெல் இரகங்​கள் இருந்​
தன.​ விவ​சா​யி​கள் ஒரு​வ​ருக்கு ஒரு​வர் இவற்​றைப் பரி​மா​றிக் கொண்​ட​
னர்.​ பசுமை புரட்​சிக்​குப் பின்​னர் ஐ.ஆர்.​ 20,​ ஐ.ஆர்.​ 50 போன்ற 4
நெல் இரகங்​கள்​ தான் இருந்​தன.​ பின்​னர் அவை​யும் காணா​மல் போய்​விட்​
டன.

அன்று விவ​சா​யத்​துக்கு வெளியி​லி​ருந்து எந்த முத​லீ​டும் வர​வில்லை.​
இன்றோ,​​ ​ எல்​லா​வற்​றை​யும் வெளியி​லி​ருந்தே வாங்​கு​கின்​ற​னர்.​
நிலைத்தை விற்​றுக் கடனை அடைக்​கின்​ற​னர்.​ நிலை கைமீ​றும்​போது தற்​கொ​
லை​யும் செய்து கொள்​கின்​ற​னர்.

இந்​தி​யா​வில் கடந்த சில ஆண்​டு​க​ளில் மட்​டும் 2 இலட்​சத்​துக்​கும்
அதி​க​மான விவ​சா​யி​கள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ள​னர்.​ ஆசைப்​பட்டு
இந்த முடிவை அவர்​கள் ​ எடுப்​ப​தில்லை.​ வாழ முடி​யாது என்ற நிலை​
யில்,​​ அவர்​கள் எடுக்ó​கும் முடி​வால்,​​ அவர்​க​ளின் குடும்​பங்​களே
சிதை​கின்​றன.

விவ​சா​யி​க​ளுக்கு நன்மை செய்​வ​தற்​காக பசு​மைப் புரட்சி கொண்டு வரப்​ப​
ட​வில்லை.​ 2ஆம் உல​கப் போர் நின்ற பின்​னர்,​​ அது​வரை போரில் பயன்​ப​
டுத்​தப்​பட்டு வந்த இரசா​ய​னங்​களை,​​ பூச்​சிக்​கொல்லி என்ற பெய​ரில்
இந்​திய வயல்​க​ளில் ​ கொட்​டு​வ​தற்​கா​கவே பசு​மைப் புரட்சி கொண்​டு​வ​
ரப்​பட்​டது.​ இதன் மூலம் அமெ​ரிக்​கா​வின் ஹென்றி போர்டு,​​ இராக்​பெல்​
ல​ரின் இரசா​யன நிறு​வ​னங்​கள் கொள்ளை இலாபம் அடைந்​தன.

அதே​போ​லத்​தான்,​​ தற்​போது மர​பணு மாற்று கத்​த​ரியை நம் நாட்​டில்
நுழைக்​கப் பார்க்​கின்​ற​னர்.​ அதற்கு கோவை வேளாண் பல்​க​லைக்​க​ழ​கம்
போன்​றவை துணை போகின்​றன.

தமி​ழ​கத்​தில் ஒவ்​வொரு ஊருக்​கும் ஒரு கத்​தரி வகை உள்​ளது.​ சுவை​யும்
ஊருக்கு ஏற்ப மாறும்.​ இந்​தி​யா​வில் 3,000 வகை கத்​த​ரி​கள் உள்​ளன.​
பி.டி.​ கத்​த​ரியை அனு​ம​தித்​தால் நாட்​டில் ஒரு கத்​தரி வகை மட்​டும்​
தான் இருக்​கும்.​ நாடு முழு​வ​தும் எதை உற்​பத்தி செய்ய வேண்​டும்;​ எதை
உண்ண வேண்​டும் என்​பதை ஒரு கம்​பெனி முடிவு செய்​யும் நிலை உரு​வா​கி​வி​
டும்.

புழு​வுக்கு எதி​ரி​யாக இருக்​கும் பிடி கத்​தரி மனி​தர்​க​ளுக்​கும் எதி​
ரி​தான்.​ இதை உண்​டால் புற்று நோய்,​​ ஆண்,​​ பெண் மலட்​டுத் தன்மை போன்​
றவை ஏற்​ப​டு​வ​தோடு,​​ தாவ​ரங்​க​ளின் செல் கட்​ட​மைப்பே குலைந்து
விடும்.

அறி​வி​யல் கண்​டு​பிப்​பு​கள் எல்​லாம் நன்மை செய்​யும் என்று ஏமாற வேண்​
டாம்;​ தீமை​யும் செய்​யும்.​ பி.டி.​ கத்​தி​ரி​யால் விவ​சா​யி​க​ளின்
வறுமை போக்​கப்​ப​டும் எனக் கூறு​கின்​ற​னர்.​ தொழில்​நுட்​பம் மட்​டும்
பட்​டி​னி​யைப் போக்​காது,​​ அர​சின் மக்​கள் நலன் சார்ந்த கொள்​கை​
யும்,​​ சீரான உற்​பத்தி,​​ விநி​யோ​க​மும்​தான் இதைச் சாத்​தி​யப்​ப​
டுத்​தும் என்​றார் நம்​மாழ்​வார்.

​கூட்​டத்​துக்கு தமீம் அன்​சாரி தலைமை வகித்​தார்.​ ம.​ சந்​தி​ர​
மெளலி,​​ வழக்​கு​ரை​ஞர் வெ.​ ஜீவக்​கு​மார் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​
நூலை நம்​மாழ்​வார் வெளி​யிட,​​ டெல்டா ரோட்​டரி சங்​கத் தலை​வர் ஏ.​
சீனி​வா​சன் பெற்​றுக்​கொண்​டார்.​ பெ.​ விஜ​ய​கு​மார் நன்றி கூறி​னார்.

17 March 2012

இயற்கை வேளாண் விஞ்​ஞானி கோ.​ நம்​மாழ்​வார்

அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை

நிலவள ஊக்கி ஆன அமிர்த கரைசலை தயாரிக்கும் முறை:
  • மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம், இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
  • 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.
  • அமிர்த கரைசல் தயார்.
பயன் படுத்தும் முறை
  • ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
  • அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும்.
  • பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும்.
  • பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம்.
  • பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம்.
  • வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.
(தகவல்: இயற்கை வேளாண்மை, 
நம்மாழ்வாரின் அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

13 March 2012







 அருட்பெருஞ்சோதி இயற்கையில் ஆர்வமிக்க அனைவரும்!

இயற்கை வழி வேளாண்மை
சான்றிதழ் படிப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலில்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஐ.ஈ.சி.டி யில் இயற்கை வழி வேளாண்மை சான்றிதழ் படிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டு அதன் மாவட்ட வழிகாட்டி மையமாக இயங்கி வரும் கரூர்-அருட்பெருஞ்சோதி கல்வி அறக்கட்டளை மூலமாக நடைபெறுகிறது.

இதுவரை வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து பயின்ற 60 பேர் பயிற்சி முடித்த நிலையில் தற்போது அடுத்த வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கி உள்ளது.

ஞாயிறு தோறும் வகுப்பு  நடைபெறும்.
வயது தடை அல்ல
தமிழ் எழுதப் படிக்கத் தெரிய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2012
கட்டணம் : ரூ.2450/-


தனித் தன்மைகள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலுடன் செய்முறைப் பயிற்சி, களஆய்வு, நேரடிஅனுபவம், கல்விச் சுற்றுலா.

வேளாண் துறையில் அனுபவமிக்கவர்கள், சுயதொழில் முனைவோர், இயற்கையை உணர்ந்த ஆன்றோர்கள் அளிக்கும் பயிற்சி.

மண்புழு வளர்ப்பு              - பணிக்கம்பட்டி திரு. கோபாலகிருஷ்ணன்
தேனீ வளர்ப்பு                - திருமதி. ஜோசப்பின்
கால்நடை வளர்ப்பு            - மருத்துவர். காசிபிச்சை
மரம் வளர்ப்பு                 - மரம் தங்கசாமி
மாட்டூட்டம்(பஞ்சகவ்யா)      - மருத்துவர். நடராசன்
ஒருங்கிணைந்த பண்ணையம் - திரு. ஞானப்பிரகாசம்


 நுண்ணுயிர் வளர்ப்பு, நீர்மேலாண்மை, வேளாண்மையின் பிற துறைகளுக்கு உயிர்ச்சூழலியல் வளர்ச்சி  நடுவம் வானகத்தின் பயிற்சியாளர்கள்.

இயற்கை வழி வேளாண்மையின் முன்னோடிகளைப் பற்றியும் இன்றைய உணவு முறையினால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் கணினி மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள தகவல் தொழில்  நுட்ப அரங்கில் பயிற்சி.

சுயதொழில் முனைய, வங்க்கிக் கடன் பெற, ஏற்றுமதி செய்ய, விளைபொருட்களை சந்தைப்படுத்த மதிப்புக்கூட்ட வழிகாட்டுதல்.

அருட்பெருஞ்சோதி பசுமை இந்தியா ஆக்ககத்தின்  நஞ்சில்லா விளைபொருட்கள் விற்பனை அங்காடியின் மூலம் சந்தைப்படுத்துதல்.

இங்கு பயிற்சி பெற்ற பலரும் இன்று இயற்கை வேளாண்மையை சிறப்பாக செய்து வருகின்றனர். மேலும் பசுமை விகடன் போன்ற இதழ்களிலும் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புக்கு:
அருட்டபெருஞ்சோதி கல்வி அறக்கட்டளை, வள்ளலார் கோட்டம்,
வாங்கல் சாலை, கரூர் 639116. அலைபேசி 9244552225.
மின்னஞ்சல்: aefkarur@gmail.com








Click here to Reply or Forward
Ads – Why this ad?
With bright sourcing opportunities, Your time to shine. Register now!

1 March 2012

ஏன் மாற வேண்டும் இயற்கை விவசாயத்திற்கு?

 பரிணாம வளர்ச்சி பெற்ற ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து உணவு சேகரித்தான்.தீயின் பயன்பாட்டை கண்டுபிடித்த பின்னர்,அவன் பக்குவப்படுத்தப்பட்ட உணவை உண்ண தொடங்கினான்.தனக்கு வேண்டிய உணவை தானே பயிரிட்டு கொள்ள,குழுவாக இனைந்து செழுமையான நதியோரங்களை தனக்குரியதாக ஆக்கி கொண்டான்.இப்படிதான் நாகரீகம் மேம்பட்டது.விவசாயம் மனிதனின் முதல் தொழில் ஆனது.ஆதியிலிருந்த மனிதன் இயற்கையோடு இணைந்து பயிர் செய்தான்.இயற்கை தனக்களித்ததை பயன்படுத்தி கொண்டு அதற்கே திருப்பி அளித்தான்.



இந்தியாவில்  விவசாயம் :


      என்ன இல்லை இந்த திருநாட்டில் ? என்று எல்லோரும் புகழும் பெருமையை பெற்றது நம் இந்திய வள நாடு.சரித்திரத்தின் பெரும் தேடல்கள் எல்லாம் இந்தியாவின் செல்வத்தை நோக்கியே தொடங்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழக மக்கள் நிலத்தின் பயன்பாடு கருதி அவற்றை குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலை என்று பிரித்துள்ளனர்.வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் உடையது மருத நிலம்.மாடு செல்வமாக கருதப்பட்டுள்ளது.ஆவும் மாந்தரும் இணைந்தே வாழ்தனர்.மனிதன் கால்நடை கழிவுகளில் இருந்து பயிர் செழித்து வளர்வதை கண்டுகொண்டான்.எனவே கால்நடையின் கழிவுகளை நிலத்திற்கும் அதன்  ஏனைய பயன்பாடுகளை தனக்கும் உபயோகித்துகொண்டான்.இயன்றவரை  இயற்கை அன்னையின் கட்டுப்பாடுக்குள்  தன் செயல்களை வரையறுத்து கொண்டான்.

                                     




பசுமை புரட்சியும் அதன் விளைவுகளும் :


காலங்கள் மாறின.நம் நாடு அன்னியருக்கு அடிமைபட்டது.இந்தியாவின் அபரிதமான செல்வத்தை அபகரித்தனர் அன்னியர்.1829 இல் தஞ்சையை பார்வையிட்ட ஒரு ஆங்கிலேயன் சொன்னான் "எனது அனுபவத்தில் நான் தஞ்சையின்  சிறந்த வண்டல் மண் சமமாக எதையும் பார்த்ததில்லை.அது, மற்ற நிலங்களிலும் இரண்டு பெரிய நன்மைகளை கொண்டுள்ளது.அதற்கு  அவர்கள் உரமிடுதல் தேவையில்லை மற்றும் அந்த  நிலம் எக்காலமும் பாழ்படமுடியாது"
நெடிய போராட்டத்தின் இறுதியில் நாம் சுதந்திரம் அடைந்தோம்.உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக 1960 களில் "பசுமை புரட்சி " கொண்டு வரப்பட்டது.இதை சாக்கிட்டு கொண்டு மற்ற நாடுகளின் கழிவுகளை நம் தலையில் கட்ட தொடங்கினார்கள்.இரண்டாம் உலக யுத்தத்தில் மிஞ்சிய அமிலங்களை உரம் என்ற பெயரில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தார்கள்.அதிக விளைச்சலுக்கு செயற்கை உரத்தை மண்ணில் கொட்டினோம்.பயிர் விளைந்தது.அபரீதமாக தேவைக்கதிகமாக   விளைந்தது.ஆனால் விஷமாக விளைந்தது.விவசாயி காலம்காலமாக சேர்த்து வைத்த விதைநெல் அவன் கையிலிருந்து ஒரு அயல் நாடு கம்பேனிக்கு கைமாறியது.அந்நியன் நம் நாட்டின் சூழலுக்கு சற்றும் பொருந்தாத மரபணு மாற்றப்பட்ட விதைகளை எல்லாம் நம்மிடம் கொடுத்து சோதித்தான்.விளைவு ,பொருந்தா விவசாய முறையால் நிலம் பாழ் ஆனது.விளைச்சல் குறைய தொடங்கியது.மண்ணை நம்பி வாழ்ந்த விவசாயி தோல்வி அடைந்தான்.வளம் இழந்த மண்ணோடும்,மண்ணுக்கு   பொருந்தாத விதைகளோடும் போரிட்டு தன்னுயிரை இழந்தான்.






நம் நாட்டு சுழலுக்கு ஏற்ப வளரும் மரபு பயிர் வகைகளை நாம் இழந்து வருகிறோம்.மண்ணுக்கும்,மனிதருக்கும் தீங்கு விளைவிக்காத இயற்கை விவசாய முறைகளை நாம் மறந்து வருகிறோம்.ஆனாலும் காலம் கடக்க வில்லை.மனிதரின் பெரும் பிழைகளை இயற்கை அன்னை மன்னிப்பதற்கு,எஞ்சி இருக்கும் நிலங்களை காக்க தொடங்குவோம்.பாழ் நிலத்தையும் பசுமையாக்கும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவோம்.பெரும் விளைவுகள் சிறு மாற்றங்களில் தான் தொடங்குகிறது.