இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வானகம்

25 July 2013

சிவகாசியில்
நம்மாழ்வாரின் நிரந்தர வேளாண்மையும் ( Permacultre ) &
இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி முகாம் ( வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட )

பயிற்சி நாள் :
ஆகஸ்ட் 09-08-2013 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல்
11-08-2013 ஞாயிறு மாலை 5 மணி வரை

இடம் : ஜேசுதாஸ் இயற்கை விவசாயப் பண்ணை, நடுவப்பட்டி விளக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.

பயிற்சி நன்கொடை :
ரூ. 2,000/- மட்டும். ( *தங்குமிடம் & இயற்கை உணவு சேர்த்து )

நிரந்தர வேளாண்மை :
--------------------------------------------------

வேளாண்மை என்பது என்றைக்கும் நிரந்தரமானது. அதில் பண்ணை வடிவமைப்பு உட்பட அனைத்துமே நிரந்தரமாக இருக்க வேண்டும். மேலும் இயற்கையில் உள்ள நிரந்தர நிரந்தரமற்ற சுழற்சிகளை பயன்படுத்துவதும் மிக முக்கியமானது.
இவையனைத்துமே செலவில்லாதவையாகவும் (கழிவுகளால் மட்டுமே செய்யக் கூடியவை ) இருக்க வேண்டும். இதில் உழவு வேண்டியதில்லை, களையெடுக்க வேண்டியதில்லை, விதைகள் வெளியில் வாங்கக் கூடாது. குறைந்த இடமே போதும்.

இந்த நிரந்தர வேளாண்மை பற்றி “ திரு. கோ. நம்மாழ்வார் “ அவர்கள் அனைவருக்கும் கற்றுத்தர உள்ளார். இது நேரடி களப் பயிற்சி.
வீட்டிலே சுகப் பிரசவம் உட்பட :
-------------------------------------------------------------
நமது நம்மாழ்வார் ஐயாவின் முதன்மை மாணவனான ” திரு. லெ.ஏங்கல்ஸ் ராஜா “ அவர்கள் இயற்கை வேளாண்மையில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் மட்டுமல்ல...

தற்போது சென்னையில் பிரபல தொடுசிகிச்சை மையமும் நடத்தி வரும் அவர் ” மருந்தில்லா மருத்துவத்தை “ ( எல்லா நோய்களுக்கும்) தமிழ் நாடு முழுவதிலும் செய்து வருகிறார்.


இவர் பல சிறப்புகளுக்கு உரியவர். அதில் குறிப்பிட்த்தக்கவை, தன்னுடைய இரண்டு குழந்தைகளை அவரே தன் வீட்டிலே பிரசவம் பார்த்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இன்று வரை அந்த குழந்தையின் கையில் தடுப்பூசி உட்பட எந்த ஆங்கில மருந்துகளையும் அளித்ததில்லை.

இவர் அனைவருக்கும் ” மருந்தில்லா மருத்துவத்தை “ ( எல்லா நோய்களுக்கும்) கற்றுத்தரவிருக்கிறார்.

இயற்கை உணவு தயாரிப்பு பயிற்சி : (உணவே மருந்து )
----------------------------------------------------------------
சிவகாசியில் பிரபல இயற்கை உணவகம் நட்த்தி வருபவர் ” திரு. மாறன்.ஜி “ அவர்கள். மேலும் இவர் தொலைபேசி வாயிலாகவும், நேரில் வருபவர்களுக்கும் இலவசமாக இயற்கை வைத்தியத்தை குணப் படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதைக் கற்றும் கொடுக்கிறார்.

அவர் தன்னுடைய உணவகம் போல உலகமெங்கிலும் வர வேண்டும் என்கிற நோக்கில் தன்னைத் தேடி வரும் வேலையில்லா இளைஞர்களுக்கு “ இயற்கை உணவகம் “ அமைப்பது பற்றிய பயிற்சியை அளித்து வருகிறார்.

யோகா, மண் குளியல், வாழைக் குளியல் :
------------------------------------------------
கும்பகோணத்தை சேர்ந்த “ ஆ.ச.ரமேஷ் “ அவர்கள் இயற்கை வா
ழ்வியல் கலையை யோகாவுடன் கற்றுக்கொடுக்க உள்ளார். மேலும் இவரும் சிறந்த இயற்கை உணவு தயாரிப்பாளர்.

லாஃபிங் தெரபி :

--------------------
வேலுரை சேர்ந்த “ முகேஷ் “ அவ
ர்கள் சிறந்த சிரிப்பு மருத்துவ நிபுணர். இவரும் கலந்து கொண்டு அனைவரின் மன அழுத்த்தைக் குறைக்க உள்ளார்.

இயற்கை சூழலில் இயற்கை உணவு :
-------------------------------------------
மூன்று நாளுமே இயற்கையான சூழலில் இயற்கை உணவுகளை அனைவருமே தயாரித்து உண்ண ஏற்பாடு
செய்யப் பட்டுள்ளது. எல்லா வேளைகளிலும் பழ உணவுகள், காய்கறி சாலட், மூலிகை சூப், ஜீஸ்கள் ஆகியவை வழங்கப் படும்.

மேலும் செயற்கையான அருவி குளியலும், மண் , மூலிகை & வாழை குளியலும் உண்டு.

தின்னைப் பேச்சு :
--------------------
இரவு நேரங்கலில் நமது பாரம்பரிய தின்னைப் பேச்சும், சுற்றுப்புறசூழல் பற்றிய விழிப்புணர்வு குறும்படமும் திரையிட
ப் படும்.

இந்த சுயசார்பு பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய...

முன்பதிவு அவசியம் : 94435 75431 , 99947 56330.
பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
J.karuppasamy
A/c No. : 008501000030808
Banka name : Indian Overseas Bank , Sivakasi.
IFSC Code : IOBA0000085


( karuppasamy2k09@gmail.com )

பயிற்சி ஏற்பாடுகளை சிவகாசி வானகம் ஒருங்கினைப்புக் குழுவினரும் , இயற்கை மூலிகை உணவகத்தினரும் செய்கிறார்கள்.

3 January 2013

 முன்னோடி சாதனை விவசாயி :

திரு. K.V. செந்தில் குமார் ( கைபேசி : 97882 03694 )
( அடர் நடவு வாழை )

                இராசாயன முறை விவசாய முறையால் பெரிதும் நஷ்டமடைந்தது ஒரு கால கட்டத்தில் இனி நாம் இயற்கை முறையை நாடி சென்றால் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதை உணர்ந்த திரு. K.V. செந்தில் குமார் அவர்கள்

“ இயற்கை ஞானி நம்மாழ்வார் அவர்களின் எழுத்துக்களாலும் ( புத்தகங்களால் ), வானொலிகளிலும், தொலைகாட்சி பேட்டிகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு இயற்கை வழி விவசாய முறையை கையாண்டு இராசாயனத்தால் வளமிழந்த தன் நிலத்தை மீண்டும் உயிர்பித்ததுடன், அனைவருக்கும் நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=rxsrePPdlqQ

மேலும் உணவு சங்கிலியிலுள்ள அனைத்து உயிர்களும் தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை தொடர்ந்து அறிவுறித்திவரும் நம்மாழ்வார் அவர்களின் வாக்கை தன்னுடைய நிலத்தில் மெய்பித்தும் காட்டியுள்ளார்.

இன்றைய சூழலில் அனைவரும் இயற்கையை நோக்கிப் பயனிப்போமானால் விவசாயிகள் மட்டுமில்லாமல் அதை உண்போர்களும் மருத்துவமனை செல்லாமல் " உணவே மருந்து " என்கிற நிலையை அடைய முடியும் எனகிறார்.

இவர் தன்னுடைய நிலத்தில் கற்பூர வல்லி வாழையை அடர் நடவு முறையில் நட்டு நிறைவான இலாபத்தை விவசாயத்தின் மூலம் மட்டுமே ஈட்டுவருகிறார். மேலும் நெல்லிலும் ஒற்றை நாற்று நடவு முறையிலும் அசத்தி வருகிறார்.

மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், விவசாயத் துறை அதிகாரிகளுக்கும் பாடம் நடத்தி சேவை செய்து வருகிறார். மேலும் அந்தப் பகுதியின் விவசாயிகளின் நண்பனாகவும் ( Farmer Friend ) அரசு நியமித்துள்ளது. மேலும் பல பரிசுகளையும், தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இவருக்கு " வாழ்நாள் சாதனையாளர் " பட்டத்தையும் அளித்துள்ளது.

மேலும் தொலைபேசி வாயிலாகவும் சேவை செய்து வருகிறார்.

இவர் போன்றவர்களால் " நம்மாழ்வார் " ஐயா அவர்கள் விதைத்த விதை இன்று மரமாக மாறி அனைவருக்கும் சேவை செய்து வருகிறது.

இந்த சாதனை மனிதருக்கு " வானகத்தின் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் ) " மூலம் பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

5 December 2012

30 November 2012

எங்களுடைய கரங்களுக்கு வலு சேர்த்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை என்பதை அறிந்த உடனே! இந்தியா மட்டுமில்லாது அனைத்து உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் மற்றும் அதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

" எழுத்தாளார் ஜெயமோகன் " அவர்கள் இந்த பகிர்வை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு எங்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி!


Photo: எங்களுடைய கரங்களுக்கு வலு சேர்த்த அனைத்து  பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

இயற்கை வழி வேளாண்மை ஆராய்ச்சிப் பணிகளை விரிவுபடுத்த நிதி உதவி தேவை என்பதை அறிந்த உடனே! இந்தியா மட்டுமில்லாது அனைத்து உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் மற்றும் அதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் நன்றி!! நன்றி!!

" எழுத்தாளார் ஜெயமோகன் " அவர்கள் இந்த பகிர்வை தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு எங்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி!
மேலும் அவகர்ளுடைய வாசகர்களும் எங்களுக்கு அதிகப் படியான பங்களிப்பை நிதி மட்டுமில்லாது பல வழிகளிலும் தொடர்ந்து அளித்த வண்னம் உள்ளனர். 

மேலும்  பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் எங்களுடைய பசுமைப் பணிக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பனை நிலம் தமிழ் சங்கம், போன்ற உலகமெங்கிலும் வாழும் தமிழர் அமைப்புகளும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் நம் இளைய தலைமுறையினர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அவரவர் தொழில் நுட்ப அறிவையே நமக்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர்களும் , அறிமுகமில்லாத நண்பர்களும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

கட்டிட வேலைகளுக்கான செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி விரைவில் முடிக்கப் பட உள்ளது.

உழவர் திருநாளிற்கு முன்னதாக பணிகளை செய்து முடிக்க மேலும் தன்னார்வர்கள் தேவை.

நம்முடைய ஆராய்சிப் பணிகளை அனைவரும் கற்று தங்கள் வாழ்வை " சுய சார்புள்ளதாக " உருவாக்கிக் கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் " வானகத்திற்கு " வரலாம்.

பங்களித்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும்  மனமார்ந்த நன்றி!!!

அக்டோபர் மற்றும் நவம்பர் 12 ம் தேதி முடிய  நங்கொடை அளித்தவர்களின் பட்டியல் ( வங்கிக கணக்கின் பிரதி )மேலும் அவகர்ளுடைய வாசகர்களும் எங்களுக்கு அதிகப் படியான பங்களிப்பை நிதி மட்டுமில்லாது பல வழிகளிலும் தொடர்ந்து அளித்த வண்னம் உள்ளனர்.

மேலும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களும் எங்களுடைய பசுமைப் பணிக்கு தொடர்ந்து பங்களிப்பை அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் பனை நிலம் தமிழ் சங்கம், போன்ற உலகமெங்கிலும் வாழும் தமிழர் அமைப்புகளும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.
மேலும் நம் இளைய தலைமுறையினர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் அவரவர் தொழில் நுட்ப அறிவையே நமக்கு அளித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தொழில் அதிபர்களும் , அறிமுகமில்லாத நண்பர்களும் பங்களித்த வண்ணம் உள்ளனர்.

கட்டிட வேலைகளுக்கான செயல் திட்டங்கள் தயாரிக்கும் பணி விரைவில் முடிக்கப் பட உள்ளது.

உழவர் திருநாளிற்கு முன்னதாக பணிகளை செய்து முடிக்க மேலும் தன்னார்வர்கள் தேவை.

நம்முடைய ஆராய்சிப் பணிகளை அனைவரும் கற்று தங்கள் வாழ்வை " சுய சார்புள்ளதாக " உருவாக்கிக் கொள்ள எப்பொழுது வேண்டுமானாலும் " வானகத்திற்கு " வரலாம்.

பங்களித்த அனைத்து பசுமை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!!!

அக்டோபர் மற்றும் நவம்பர் 12 ம் தேதி முடிய நன்கொடை அளித்தவர்களின் பட்டியல் ( வங்கிக கணக்கின் பிரதி )

7 November 2012

உங்களுள் மாற்றம்! சமுதாயத்திலும் மாற்றம்! வேண்டுமா ?
மூன்று நாட்கள் சுயசார்பு வாழ்வியல் பயிற்சி
( 3days Leadership Training )



           கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற நவம்பர் மாதம் 23.11.2012 முதல் 25.11.2012 ஆகிய மூன்று நாட்களில் சுயசார்பு வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்
சி, கலாச்சார மாற்றம், பராம்பரியத்தை மீட்க என்ன வழி ? & கலைந்துரையாடல் நடைபெறும்.
        செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும். இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 750/- மட்டும்.
தங்குமிடம், உணவு இலவசம்.


பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311


முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி எண் : 9443575431


இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.

மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்.